என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேரகுளம் அருகே விபத்து மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒர்க் ஷாப் உரிமையாளர் பலி
- நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21)
- சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
செயங்துங்கநல்லூர்:
நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 21). இவர் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு நெல்லை மாவட்டம் இட்டடி அருகே மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துவிட்டு கடைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
இதில் காளிதாஸ் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த காளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான தாழையூத்து ரெயில்வே பீடர் ரோடு சேர்ந்த நல்லையா (40) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்