search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Self Help"

    • சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்வகை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப் பினரை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத் திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபார கடன், பெண்களுக்கான கடன், நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்த வராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப் படும்.

    பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத் தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண் டும். ஒரு குழுவில் அதிக பட்சம் 20 உறுப்பினர் கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர் களுக்கு கடனுதவி வழங்கப் படுகிறது.

    மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங் களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப் பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல் களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் மற்றும் கூட்டு றவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    • கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    ஊட்டி,  

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார்.

    அதனடிப்படையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மேலும், நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 07.05.2021 முதல் 23.01.2023 தனிநபர் வங்கி கடன் இணைப்பு ரூ.1.99 கோடி மதிப்பிலும், 160 பயனாளிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பில் சுய தொழில் புரியும் சுய உதவிக்குழுக் கடன் இணைப்பினையும், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள 11,309 உதவிக்குழுக்களுக்கு ரூ.600.31 கோடி மதிப்பில் வங்கி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் 1,416 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.38 கோடி, 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.24 கோடி மதிப்பில் பெருங்கடனும், 2 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலும் பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 29.12.2022 அன்று 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33.21 கோடி மதிப்பில் வங்கிக்கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பயனடைந்த மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர்ச சிகலா கூறும்போது:-

    நான் நெடுகுளா ஊராட்சி கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். இந்த கூட்டமைப்பின் கீழ் ஹெத்தையம்மன் சுய சிந்து நதி உதவிக்குழு, சிந்து சுயஉதவிக்குழு, அறிஞர் அண்ணா சுய உதவிக்குழு என 136 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    எங்கள் கூட்டமைப்பில் உள்ள 25 குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர்களின் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    ×