search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
    X

    பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

    • சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்வகை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப் பினரை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத் திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபார கடன், பெண்களுக்கான கடன், நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்த வராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப் படும்.

    பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத் தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண் டும். ஒரு குழுவில் அதிக பட்சம் 20 உறுப்பினர் கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர் களுக்கு கடனுதவி வழங்கப் படுகிறது.

    மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங் களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப் பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல் களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் மற்றும் கூட்டு றவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×