search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student impact"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அதிக அளவிலான பாதிப்புகளை தாங்கி நிற்கும் குக்கிராமங்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

    100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், மின்சாரம், உணவு, உடை இருப்பிடம் இன்றி பலர் தவித்து வருகிறார்கள். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் பல இடங்களில் வெளி யேற்றப்பட்டு வருகிறார்கள். நிவாரண பொருட்களை எதிர்பார்த்து பல இடங்களில் பொதுமக்கள் சாலைகளில் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

    இந்த நிலையில் மழை சற்றே ஓய்ந்து நிவாரண பணிகள் சூடுபிடித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந் தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை, வேளாடிப்பட்டி, புதுநகர், விரடிப்பட்டி, கீர னூர், அரிமளம், ஆவுடையார் கோவில், அன்னவாசல், விரா லிமலை, இலுப்பூர் மற்றும் கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெக தாப்பட்டினம், மீமிசல், மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    இன்று காலை மீண்டும் கன மழையாக பெய்து வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவு மழை பெய்வதால் அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    அதேபோல் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கந் தர்வக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் கன மழையால் கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அவர்களுக்கான முகாம்களிலேயே முடங்கியுள்ளனர்.

    குக்கிராமங்களுக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் புயலால் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்பபடாமல் உள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன. இதனால் குக்கி ராமங்களில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட முடியவில்லை.

    பல இடங்களில் வீடுகளை இழந்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும், பனியிலும் அவதிப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக தார்ப்பாய் களை வாடகைக்கு எடுத்து அதயை மேற்கூரையாக்கி தங்கியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. கொட்டும் மழையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நனைந்தவாறு சென்றனர். பெரிதும் அவதிப்பட்ட பலர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை. இதேபோல் வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    புதுக்கோட்டை-18, ஆலங்குடி-19, கந்தர்வக்கோட்டை-15, கறம்பக்குடி -26.60, திருமயம்-18.60, அறந்தாங்கி-4, ஆவுடையார் கோவில்-17.20, மணல் மேல்குடி-18, இலுப்பூர்-9, பொன்னமராவதி-4. அனைத்து பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 161.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி பாடாலூர் மற்றும் புதுவேட்டக்குடியில் 2 மி.மீ. மழை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 4 மி.மீ. மழையும், சராசரியாக 0.36 மி.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் இதமான குளிர் காற்றுவீசி வருகிறது.

    கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. காலை 9 மணிக்கு மேலும் சூரிய உதயம் தென்படவில்லை. நேற்றிரவு இரவு கடும் குளிர்காற்று வீசியது. குளித்தலை பகுதியில் 1 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜெயங்கொண்டத்தில் அதிகபட்டசமா 38.2 மி.மீ மழையும், திருமானூர் 19.04 மி.மீ, அரியலூரில் 15 மி.மீ மழையும், செந்துறை பகுதிகளில் 5.02 மி.மீ மழையும் பெய்துள்ளது.

    திருச்சி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம், சமயபுரம், திருச்சி நகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    திருப்பூர், ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர். #ootyheavyrain

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில சமயம் தூறல் அடித்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் லேசான தூறல் அடித்தது. பின்னர் பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை நீடித்தது.

    கோவை புறநகர் பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம், துடியலூர், கவுண்டம் பாளையம், கருமத்தம் பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை நீடித்தது.

    கோவை மாநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பள்ளி மாணவர்கள் குடை பிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் பள்ளிக்கு சென்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை நீடித்தது. ஊட்டியில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை காரணமாக ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். #ootyheavyrain

    ×