search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School kids"

    • தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பாராளுமன்ற தேர்தலும் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதி தேர்வு 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் முடியும் என்றும் 13-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.

    மேலும் தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு 2 தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதாவது 10-ந் தேதி நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வை 12 நாட்கள் கழித்து 22-ந் தேதியும் 12-ந்தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 11 நாட்கள் கழித்து 23-ந்தேதியும் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 2 தேர்வுகளையும் முன் கூட்டியே முடித்து இருக்கலாம். மொத்தம் 5 தேர்வுகள் தான். 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தேர்வு நடைபெறுகிறது. எனவே அந்த இடைவெளியை குறைத்து முன் கூட்டியே முடித்து இருக்கலாம். இது தேவையில்லாமல் குழந்தைகளை வெயிலில் வதைப்பதாகும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

    • பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.
    • சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர்.

    புதுச்சேரி:

    பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.

    சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த தர்பார் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான பொன்னிய செல்வன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, பூங்குழலி, வானதி, ஆழ்வார்க்கு அடியார், பழுவேட்டரையர் உள்ளிட்ட பல பாத்திரங்கள் ஒப்பனையில் தோன்றினர்.

    குழந்தைகள் மழலைத் தமிழில் பேசிநடித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர். 

    ×