search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Savings Scheme"

    • 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்
    • மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய அஞ்சால் துறையின் புதுவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்ட சிறப்பு முகாம் அனைத்து அஞ்சல கங்களிலும் நடக்கிறது.

    வரும் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும், பெண்ணின் பாதுகாவலரும் கணக்கை தொடங்கலாம்.

    ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டு எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம்.

    கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பின் 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நிதி சுதந்திரத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சியாகும்.

    இந்த திட்டம் குறுகியகால முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் பெண் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது.
    • முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    உடுமலை :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தளி பேரூராட்சிக்குட்பட்ட குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது. ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை மற்றும் தளி பேரூராட்சி சார்பில் இந்த முகாம் நடந்தது. அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் .

    இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, பேரூராட்சி தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் செல்வன் பிரியா, நர்சிங் கல்லூரி முதல்வர் தவசிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் மலர்வழி ஒருங்கிணைத்தார். முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    • சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமர்நிஷா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி, விக்னேஷ் அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் தற்போது குடியிருந்து வந்த முருகேசன், அவரது மனைவி மீனா ஆகியோர் மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகில், நேதாஜி ரோட்டில் ''ஐஸ்வர்யா தங்க மாளிகை'' என்ற பெயரில் பல்வேறு நகை சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தருவதாக ஆசை காட்டினர்.

    மேலும் 2 மாதத்திற்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு (வவுச்சர்) பெற்றுக்கொண்டு பணமாகவோ, நகையாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் நம்பகமான ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து பணத்தை முதலீடு செய்ய வைத்து, முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜராகி புகார் மனு கொடுத்தனர்.

    அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே ஐஸ்வர்யா தங்க நகை மாளிகை என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்க ளுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, எண். 4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×