search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanitary napkins"

    • பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய்.

    பருவம் அடையும் காலகட்டத்தை நெருங்கும் உங்களுடைய பதின்மவயது மகளுக்கு ஒரு தாயாக உங்களுடைய ஆதரவும், ஆலோசனைகளும், அரவணைப்பும் அதிகமாக தேவைப்படும். இந்த நேரத்தில் பெண் குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பல்வேறு மாற்றங்களை சந்திப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு உண்டாகும் பயத்தையும். குழப்பத்தையும் போக்க வேண்டியது ஒரு தாயின் கடமையாகும்.

    மாதவிடாய் நாட்களை எளிதாகவும், இயல்பாகவும் எவ்வாறு கடந்து செல்வது என்பதை பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.

    பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதாகவே அவர்களுடைய மார்பகங்கள் பெரிதாவது. அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வது போன்ற மாற்றங்களை தாயால் கவனிக்க முடியும். தன்னுடைய மகள் பருவமடைய போகிறாள் என்னும் நிதர்சனத்தை தாய்மார்கள் பலரும் ஒருவித பதற்றத்துடனேயே எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் சானிட்டரி நாப்கின்கள் தொடர்பான விளம்பரங்களை பார்க்கும்போதே, குழந்தைகள் மாதவிடாய் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதை உணர்ந்து, மாதவிடாய் குறித்த சரியான தகவல்களை தாய்மார்கள் தான் மகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

     மனித வாழ்க்கையில் இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய். அதுகுறித்த தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் உங்கள் மகளிடம் பேசுங்கள். முதலில், மாதவிடாய் குறித்து அவள் என்ன தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதை காதுகொடுத்து கேளுங்கள். மாதவிடாய் குறித்து சில தவறான தகவல்களை உங்கள் மகள் தெரிந்து வைத்திருந்தாலும், அதை அன்போடு திருத்துங்கள்.

    9 முதல் 15 வயதுக்குள் பெண் குழந்தைகள் தங்களுடைய முதல் மாதவிடாய் நாட்களை சந்திக்கிறார்கள். சராசரியாக 12 வயது தொடங்கியதுமே, சானிட்டரி நாப்கின், ஒரு ஜோடி உள்ளாடைகள் ஆகியவற்றை எப்போதும் அவர்களது பள்ளிப் பையில் வைத்திருக்கவும், அதன் அவசியத்தையும் எளிமையாகச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

    மாதவிடாயைப் பற்றி வட்டார வழக்கில் கூறாமல் அறிவியல் ரீதியாக சொல்லிக் கொடுங்கள். தாயாகிய உங்களுக்கு பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேசுவதற்கு தயக்கம் இருந்தால், உங்கள் வயதுடைய உறவுக்கார பெண் அல்லது வயதில் மூத்த பெண்களை பேச வைக்கலாம்.

     மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின், கப், டாம்பான் ஆகியவற்றை முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாக. வெட்கப்படாமல் உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். மாதவிடாயின்போது அணியும் உள்ளாடைகளை சுத்தமாக பராமரிப்பது. உடலையும் அந்தரங்க உறுப்புகளையும் எவ்வாறு சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுங்கள். இதன் மூலம். மாதவிடாய் மீதான குழப்பமும். பயமும் நீங்கி பெண் குழந்தைகளின் மனம் தெளிவு அடையும்.

    மேலும், பிறப்புறுப்பு பகுதியில் சோப்பு போன்ற ரசாயனங்களைக்கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துங்கள்.

    பள்ளியிலோ, வீட்டிலோ, பொது இடத்திலோ அல்லது சமூக- குடும்ப நிகழ்வுகளிலோ இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டாலும், அந்த சூழ்நிலையை எளிமையாக கையாண்டு இயல்புநிலைக்குத் திரும்புவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுங்கள்.

    நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. #GST #GSTCouncil
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை கீழே பார்க்கலாம்:-

    முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

    பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் (12 சதவிகித வரி தற்போது உள்ளது),  முதியோர் இல்லங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகள், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகள்

    28 சதவிகித வரியில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    ஏ.சி., பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர்கள், வாஷிங் மெஷின், டிவி (68 செ.மீ வரை), வாக்யூம் கிளீனர்ஸ், பெயிண்டுகள், முடி திருத்தும் கருவி, முடி உலர்த்தும் கருவி, பாடி செண்ட் மற்றும் ஸ்பிரேக்கள், லித்தியம் இயான் பேட்டரிகள், குளியலறை ஸ்பிரே, டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்கள்.

    18 சதவிகித வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    பர்சுகள், நகைப்பெட்டிகள், ஹேண்ட் பேக்குகள், கண்ணாடி மற்றும் புகைப்பட பிரேம்கள், அலங்கார பிரேம்கள், மண்ணெணை அடுப்பு, இரும்பு அலங்கார பொருட்கள்.

    5 சதவிகித வரிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள்:

    யூரியா உரம், எத்தனால், திட உயிரி எரிபொருள் குண்டுகள், கையால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், கையால் தயாரிக்கப்பட்ட சவுரி முடிகள், கோரைப்புற்களை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 
    பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #GST #SanitaryNapkinsExempted
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியுஷ் கோயல், ‘பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #GST #SanitaryNapkinsExempted
    ×