search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sand pots"

    • உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள்.
    • 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை மண்பானை செய்யப்படுகிறது.

    உடுமலை :

    கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காதபடி குளுமையை அளிப்பது மண்பானைகள் தான்.பொருளாதார வசதியில்லாத மக்களும், மண்பானை பயன்படுத்த முடிவதால் இவை ஏழைகளின் ஏ.சி., என அழைக்கப்படுகிறது.இத்தகைய பானைகளுக்கு கோடை காலம் துவங்கி விட்டதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. உடுமலையில் பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்கப்படுகிறது.அங்கு 200 முதல் 500 ரூபாய் வரை, அதன் அளவுகளுக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது.

    பானைகளிலும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட ஜக்குகள், குவளைகள் என பலவி தமான வடிவங்களிலும் உள்ளன.மடத்துக்குளம், கணியூர், கணக்கம்பா ளையம், பூளவாடி, உள்ளி ட்ட பகுதிகளிலிருந்து பானைகள் மொத்தமாக பெறப்பட்டு இங்கு சந்தை ப்படுத்தப்படுகின்றன. பொதுமக்களும் பானை களை பயன்படுத்துவதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.

    ×