search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samba district"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சோதனைச் சாவடியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த  ஒருவர் உயிரிழந்தார். 

    மேலும், இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #BSFjawan #BSFjawankilled #blastinSamba #Sambadistrict
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட நகராட்சி தேர்தலில் சம்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #Sambarecords #JKcivicpolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    முதல்கட்ட தேர்தலில் 65 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.6 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.
     
    இந்நிலையில், பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் 75.3 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1 சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 3.2 சதவீதம், ஸ்ரீநகரில் மட்டும் மிகவும் குறைந்தபட்சமாக 1.8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ஓட்டுமொத்தமாக இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட நகராட்சி தேர்தலில் 16.3 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Voterturnout #Sambarecords #JKcivicpolls
    ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளனர். #KashmirInfiltrationBid #BSF
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜம்மு பிராந்தியம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அதேசமயம் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இன்று பயங்கரவாதிகள் ஒரு குழுவாக ஊடுருவ முயன்றனர். போபியான் பகுதியில் அவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர்.

    சிறிது நேரம் இந்த சண்டை நீடித்த நிலையில்,  பயங்கரவாதிகள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர். இதன்மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் சர்வதேச எல்லையில் நடந்த 4-வது ஊடுருவல் முயற்சி இது ஆகும்.



    பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #KashmirInfiltrationBid #BSF
    ×