என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த எல்லைப் பாதுகாப்பு படை
Byமாலை மலர்16 May 2018 10:20 AM GMT (Updated: 16 May 2018 10:20 AM GMT)
ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளனர். #KashmirInfiltrationBid #BSF
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜம்மு பிராந்தியம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அதேசமயம் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இன்று பயங்கரவாதிகள் ஒரு குழுவாக ஊடுருவ முயன்றனர். போபியான் பகுதியில் அவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirInfiltrationBid #BSF
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜம்மு பிராந்தியம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அதேசமயம் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இன்று பயங்கரவாதிகள் ஒரு குழுவாக ஊடுருவ முயன்றனர். போபியான் பகுதியில் அவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர்.
சிறிது நேரம் இந்த சண்டை நீடித்த நிலையில், பயங்கரவாதிகள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர். இதன்மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் சர்வதேச எல்லையில் நடந்த 4-வது ஊடுருவல் முயற்சி இது ஆகும்.
பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirInfiltrationBid #BSF
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X