என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrictnews"
- ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது
- ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது
சேலம்:
சேலம் மாநகர பிரதான பகுதிகளில் நவீன கண்கா ணிப்பு காமிராக்களை சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டது. தனியார் துறையினரும் ஆங்காங்கே காமராக்கள் பொருத்தினர். இதனைத் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்தது. மேலும் கண்காணிப்பு காமிராவை பயன்படுத்தி நிறைய குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பராமரிக்கவில்லை
குற்றங்களை கட்டுப்ப டுத்துவது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விதி மீறல்கள் என முக்கிய நட வடிக்கைகளை கையாளு வதில் மூலைமுடுக்குகளில் நிறுவப்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் காலப்போக்கில் கண்கா ணிப்பு காமிராக்களை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, பெரும்பான்மையான காமிராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது.
சேலம் மாநகரின், 17 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அரசின் சார்பில், 2,030 காமிராக்கள், தனியார் பங்களிப்புடன் பொது இடங்களில் போலீசாரால், 19,423 காமிராக்கள் என மொத்தம், 21,453 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காமிராக்கள் 3-வது கண்ணாக இருந்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், சேலம் மாநக ரத்தில் 5,000 காமிராக்களை நிறுவ போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
2,525 காமிராக்கள் செயல்படவில்லை
இந்நிலையில், சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், 8 இடங்களில் கார்களின் கண்ணாடியை உடைத்து நடந்த திருட்டு, 5 கொலை சம்பவங்கள் நடந்த இடங் கள், திருட்டு, வழிப்பறி, கொள்ளை நடந்த இடங்க ளில் அமைக்கப்பட்டுள்ள காமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2,525 காமிராக்கள் கடந்த 6 மாதங்களாக செயல் படாமல் இருப்பதும், 525 காமிராக்கள் பதிவுகளை சேமிக்கும் திறனை இழந்து இருப்பதும் தெரிய வந்தது.
இதனால், குற்றவாளி களை கைது செய்ய முடியா மல், குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.
நோட்டமிட்டு...
கண்காணிப்பு காமி ராக்கள் செயல்பாட்டில் இல்லாத இடங்களில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காமிராக்கள் இயங்காத இடங்களை நோட்டமிட்டு குற்றச் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் காவல்துறை யினரிடம் சிக்காமல் அவர்கள் எளிதாக தப்பிச் செல்கின்றனர்.
அதிர்ச்சி
இது குறித்து, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியின் பார்வைக்கு நுண்ணறிவு பிரிவு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
கண்காணிப்பு காமிராக்கள் செயல் படாத தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த கமிஷனர் , இந்தப் பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய உத்தர விட்டுள்ளார்.
எனவே பழுதான சி.சி.டி.வி.காமிராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், முக்கிய கடைவீதி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிதாக சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தவும் அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு
- 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்தது
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி 75 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கையுடன் கடந்த 1990-ல் பயன்பாடுக்கு வந்தது. அப்போதைய இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, உரிமம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கி வந்தது.
இந்த நிலையில், 2013 -ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியதோடு, 3 ஆண்டுக்கான ஆய்வு 2018-ல் 5 ஆண்டாக மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரம், இந்திய மருத்துவ கழகம், தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி 5 ஆண்டுக்கான ஆய்வு, கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில் அதற்கு முன்னதாகவே, தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை பெற்ற ஆணையம், 2028 -ம் ஆண்டு மார்ச் வரை, 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளது.
- முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணி
- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகை
சேலம்:
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதி களில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெற லாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை யளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவ ரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய வுள்ள தொழில் நிறுவ னங்க ளும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகா மில் கலந்துகொண்டு பயன டையுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்
- 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
சேலம்:
சேலம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, அவர்கள் கூறியதாவது:-
கீரிப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவை அடங்கிய மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட உள்ளதாக கூறினார்.மேலும் அதற்கு பணம் வழங்கினால் அதிக வட்டி தருவதாகவும் கூறி, இப்ப குதியை சேர்ந்தவர்களிடம் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என 40 பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை வாங்கிக் கொண்டு, 2, 3 மாதங்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார்.
ஆனால் அதன் பிறகு வட்டியும் தராமல், அசலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து செல்வத்திடம் கேட்டபோது தந்து விடுகிறேன் என சொல்லிக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே இது குறித்து எஸ்.பி. அலுவ லகம் மற்றும் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தலைமறைவான நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சி லிங்
- 14-ந்தே திக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீ யரிங் மாணவர் சேர்க்கை
சேலம்:
தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சி லிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூ ரிகளை வருகிற 14-ந்தே திக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீ யரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.






