search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salagrama Stone"

    • இமயமலை அடிவாரப் பகுதியில் 'ஹரி பர்வதம்' என்ற மலை உள்ளது.
    • கண்டகி நதியில் தான் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.

    நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரப் பகுதியில் 'ஹரி பர்வதம்' என்ற மலை உள்ளது. இங்கே சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் பாயும், கண்டகி நதியில் தான் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.

    கங்கை, யமுனை நதிகளுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் தனக்கு இல்லையே என கண்டகி நதித்தாய் வருத்தம் கொண்டாள். தன்னுடைய எண்ணத்தை பெருமாளுக்கு தெரியப்படுத்த தவத்தில் ஆழ்ந்தாள். பெருமாள் அவள் முன் தோன்றியதும், தனக்கும் பெருமாளுடன் சம்பந்தம் வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தாள். பெருமாளும், சாளக்கிராமக்கல்லாக இந்நதிக்கரையில் உற்பத்தியாகிறார்.

    மகாவிஷ்ணு `வஜ்ரகிரீடம்' என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமக் கல்லைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்தார். பலவிதமான சுருள்ரேகைகளையும், சக்கரங்களையும் வரைந்து, விஷ்ணு, நாராயண, நரசிம்ம, வாமன, கிருஷ்ண அம்ச கற்களாக உருமாறினார்.

    நேபாளத்திலுள்ள ஹரிபர்வத மலையில் சக்கரதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த பகுதியில் இருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. தற்போது இந்த இடத்திற்கே `சாளக்கிராமம்' என்ற பெயர் வந்துவிட்டது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படும் சாளக்கிராமக்கற்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன.

    இந்த கல் வைணவ வழிபாட்டில் உள்ளவர்களுக்கு தெய்வீகம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த சாளக்கிராமக் கல் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன.

    மகாவிஷ்ணுவே, தங்க மயமான ஒளி பொருந்திய 'வஜ்ரகிரீடம்' என்னும் புழுவாக வடிவம் எடுத்து சாளக்கிராம கற்களைக் குடைந்து. அதன் மையத்திற்குள் சென்று, ஓம்கார சப்தம் எழுப்பியபடி, தன் முகத்தினால் பல்வேறு அடையாளங்களை ஏற்படுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உருவாகும் சாளக்கிராம கற்களில், நாராயணனின் ஜீவ வடிவம் ஐக்கியமாகி இருப்பதால், அந்த சாளக்கிராம கல்லையும், மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பக்தர்கள் போற்றுகின்றனர்.

    ×