search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruined road"

    • சிமெண்டு சாலை மிகவும் சிதிலமடைந்துள்ளதாக புகார்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுதல்

    நெமிலி:

    பனப்பாக்கத்தை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமம், ஆதி திராவிடர் காலனியில் சுமார் 1,000 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் யாராவது இறந்துவிட்டால் அங்குள்ள ஏரிகால்வாய் மீது போடப்பட்டுள்ள சாலை வழியாக உடலை எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏரி கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிமெண்டு சாலை மிகவும் சிதிலமடைந்தது.

    மேலும் சாலையில் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக் கிறது. இதனால் இங்கு இறப்ப வர்களின் உடலை எடுத்து செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது உடலை எடுத்து செல்ல வழி இல்லாத தால் வயல்வெளியில் பிணத்தை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனைஅடைகின்றனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளது. இதுதவிர திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலும் இங்கு உள்ளது.இப்படிப்பட்ட அற்புத ஸ்தலங்களால் அமையப் பெற்றது கடலூர் மாவட்டம். மேலும் கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்டு பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரி களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   மேலும் கடலூரில் சில்வர் பீச், பெரிய மால் எண்ணிலடங்காத சிறிய மற்றும் பெரிய அளவிலான விலை குறைந்த விலை அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வேறு எந்த பகுதியை காட்டிலும் கடலூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடலூர் மாவட்டம் வழியாகத்தான் செல்ல முடியும். மேலும் கடலூர் துறைமுக பகுதி, தேவனாம்பட்டினம் பல்வேறு மீனவ குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடலூரில் இருந்து முதுநகர் மற்றும் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மிகவும் சேதம் அடைந்து பெரும் பள்ளங்களாக உள்ளதால் அதில் செல்லக்கூடிய வாகனங்களால் சிறிது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் சாலையிலிருந்து வரும் புகையினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்தினால் வாகனங்களும் பெரிதும் சேதமடைகிறது  நீண்ட நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் உள்ள குண்டு குழியுமாக உள்ள பெரிய பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுகின்றனர்.

    • கடலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவசர காலங்களில் 108 ஆம்பு லன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழனியாண்டவர் நகர்உள்ளது. இந்த நகரில் அரசு அதி காரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழனி ஆண்டவர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதி சரிவர இல்லாமல் குண்டும் குழியுமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாத அள வில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த பஞ்சரான சாலையினால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கவில்லை இத னால் மழைக்காலங்களில் மழை நீர் கழிவுநீர் கால்வாயில் தேங்கி சாலையில் பெருக் கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுநீரில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர் களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் கால்வாயில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசி அங்குள்ளவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலர் இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளினால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×