search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy attack"

    வேலூர் அருகே ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடி கார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வீச்சு என்கிற தினேஷ் (வயது 32). இவர் மீது கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமாரை கொன்று பாலாற்றில் புதைத்த வழக்கு உள்ளது.

    இதைத்தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் வீச்சு தினேஷ் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஜாமீனில் வெளியில் இருந்த அவர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டார்.

    சத்துவாச்சாரி ரங்கா புரத்தில் கடந்த 22-ந் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி வீச்சு தினேஷை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    வீச்சு மற்றும் கூட்டாளிகள் சத்துவாச்சாரியை சேர்ந்த மணிகண்டன் (27), நவீன் (24) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை ரவுடி வீச்சு தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் காரில் அவரை அழைத்து சென்றனர். கார் ஜெயிலை கடந்து வேலூர் டவுன் நோக்கி சென்றது. தொரப்பாடியில் உள்ள ஏ.டி.எம். அருகே காத்திருந்த 6 பேர் கும்பல் வீச்சு தினேஷ் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    இதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே கும்பல் அரிவாள்களுடன் காரை நோக்கி வந்தனர். சுதாரித்து கொண்ட வீச்சு தினேஷ் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர்.

    சுதாரித்துக்கொண்ட கும்பல் பைக் மற்றும் காரில் தப்பி சென்றுவிட்டனர். குண்டு வீச்சில் வீச்சு தினேஷ் கார் முன்பகுதி சேதமடைந்தது. காரை நிறுத்தாமல் வந்த அவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அருகே காரை நிறுத்திவிட்டு போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர். சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

    வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதர் இது பற்றி வீச்சு தினேஷிடம் விசாரணை நடத்தினர். மேலும் குண்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    சத்துவாச்சாரி பாலாற்றில் நேதாஜி நகரில் இருந்து காங்கேயநல்லூர் செல்லும் பாதையில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிச்சை பெருமாள் கொலை செய்யப்பட்டார்.

    இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொர்பாக வீச்சு தினேசை கும்பல் கொலை செய்ய முயன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தொரப்பாடியில் உள்ள காண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குண்டு வீசிய கும்பல் குறித்து துப்புதுலக்கி வருகின்றனர்.

    வேலூரில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டபகலில் ரவுடி கார் மீது கும்பல் வெடிகுண்டு வீசியுள்ளனர்.

    இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×