search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "River Water Link Project"

    • 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது .
    • 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பி யாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

    சபாநாயகர் ஆய்வு

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது . தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணி கள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற மார்ச் 31- ந்தேதிக்குள் நதிநீர் இணைப்பு திட்டம் நிறை வேற்றப்படும் என்று சமீபத்தில் நெல்லைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தண்ணீர் செல்லும் வகையில் குழாய்க ளும் அமைக்கப்பட்டு வருகி றது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு மற்றும் கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    குழாய்கள்

    அமைக்கும் பணி

    பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப் பட்டு 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற்றுவிடும். இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டமாக திட்டத்தின் இறுதிப்பகுதியான எம்.எல்.தேரி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும். எம்.எல்.தேரி வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் இந்த பகுதிக்கான பணி முடிவடைந்து விடும்.

    பொட்டல்விளை பகுதியில் ஒரு விவசாயி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மன்னார் புரம், கோட்டைகருங்குளம் ஆகிய பகுதிகளில் பணி கள் மெதுவாக நடந்து வருகிறது.

    கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் 6 முதல் 8 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 45 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    முதுமொத்தான் மொழியில் 65 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது. 3,500 கன அடி கொள்ளவு கொண்ட இந்த கால்வாயில் இந்த ஆண்டு முதல் கட்டமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் முழு பலன் பெறாவிட்டாலும், 35 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலம் பயன்பெறும்்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கண்காணிப்பு பொறி யாளர்கள் செல்வ ராஜ், பத்மா, செயற்பொறி யாளர்கள் பழனிவேல், அண்ணாதுரை, திருமலை குமார், ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கணேசன், நளன், சங்கரபாண்டியன் மற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால் மற்றும் பலர் உடன் சென்றனர்.

    ×