search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief funds"

    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி, பிரதமர் மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த மாதம் கடும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய உள்துறை மந்திரியிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டு கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற உள்துறை மந்திரி மத்திய ஆய்வுக்குழு வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய விரைவில் கர்நாடகா அனுப்பிவைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆய்வுக்குழுவின் முடிவை பொருத்து எவ்வளவு நிதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு உடன் இருந்தனர். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    ×