search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release ceremony"

    • ‘வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை சட்டக்கல்லூரி அருகில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் நீலம் பதிப்பகத் தின் சார்பில் தி.லஜபதி ராயின் வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா வில் வழக்கறிஞர் ச.ராஜ சேகர் வரவேற்றார்.

    நீலம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர் தொடக்க உரையாற் றினார். புதுச்சேரி மொழியி யல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்கு நர் பக்தவச்சல பாரதி நூலை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.

    வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூல் குறித்து பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல் கான், வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் உரை யாற்றினர்.

    முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் நூல் ஆய்வுரை யும், நூலாசிரியர் தி.லஜபதி ராய் ஏற்புரையும் ஆற்றினர். விழாவில் திரளான தமிழ் ஆர்வலர்கள், நூல் ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
    • விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியரும், நல்லாசிரியர் கவிஞர் லோக நாதன் எழுதிய விண்மீன் விளக்குகள், தங்கத் தூறல், விடியட்டும் பொழுது, கொரோனா-2020 ஆகிய 4 நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் வரவேற்று பேசினார். முன்னாள் பள்ளி கல்வி இணை இயக்குனர் சோம சுந்தரம், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் கோ.பாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நூல்களை பேராசிரியர் பஞ்சாங்கம் வெளியிட்டார். அதனை பத்திர எழுத்தர் ராமலிங்கம், இந்தியன் ரெயில்வே பொறியாளர் ஜெயக்குமார், விஜய் ஏஜென்சி உரிமையாளர் விஜயரங்கம், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பிரபு, கற்பக பைனான்ஸ் உரிமை யாளர் கேசவ பெருமாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    வக்கீல் கோவிந்தராசு, சீனு வேணுகோபால், மொழியியல் பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் சம்பத் ஆகியோர் நூல்களை ஆய்வு செய்தனர். நூல் ஆசிரியர் கவிஞர் லோக நாதன் ஏற்புரையாற்றினார். மூகாம்பிகை நகர் செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.

    • விருதுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வி.ஜெ.ஆர் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக கலாம் கனவு விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணி செய்த ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்கு மாருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    மேலும் அறக்கட்டளை நிகழ்வுகள் கொண்ட 2023 புத்தகத்தை நவீன் முரளிதார் மற்றும் ஆனந்த் பாண்டி வெளியிட அறக்கட்டளை தலைவர் கோபிநாத் பெற்றுக்கொண்டர்.

    மேலும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது
    • விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது. விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். இதனை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத் தலைவர் ஆவடிகுமார், தமிழ்ச் சங்க செயலர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ஆதிகேசவன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×