search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவிஞர் லோகநாதனின் நூல்கள் வெளியீட்டு விழா
    X

    புதுவை தமிழ்சங்கத்தில் கவிஞர் லோகநாதனின் நூல்கள் வெளியீட்டு விழா நடந்த போது எடுத்தபடம்.

    கவிஞர் லோகநாதனின் நூல்கள் வெளியீட்டு விழா

    • நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
    • விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியரும், நல்லாசிரியர் கவிஞர் லோக நாதன் எழுதிய விண்மீன் விளக்குகள், தங்கத் தூறல், விடியட்டும் பொழுது, கொரோனா-2020 ஆகிய 4 நூல்கள் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் வரவேற்று பேசினார். முன்னாள் பள்ளி கல்வி இணை இயக்குனர் சோம சுந்தரம், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் கோ.பாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நூல்களை பேராசிரியர் பஞ்சாங்கம் வெளியிட்டார். அதனை பத்திர எழுத்தர் ராமலிங்கம், இந்தியன் ரெயில்வே பொறியாளர் ஜெயக்குமார், விஜய் ஏஜென்சி உரிமையாளர் விஜயரங்கம், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பிரபு, கற்பக பைனான்ஸ் உரிமை யாளர் கேசவ பெருமாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    வக்கீல் கோவிந்தராசு, சீனு வேணுகோபால், மொழியியல் பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் சம்பத் ஆகியோர் நூல்களை ஆய்வு செய்தனர். நூல் ஆசிரியர் கவிஞர் லோக நாதன் ஏற்புரையாற்றினார். மூகாம்பிகை நகர் செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×