search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashtrapati Bhawan"

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள செசல்ஸ் அதிபர் டேனிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. #SeychellesPresident
    புதுடெல்லி:

    செசல்ஸ் அதிபர் டேனி பயூரே 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள சமர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். நேற்று உலக பாரம்பரிய இடமான பழைய கோவாவில் தனது உயர்மட்டக் குழுவினருடன் சென்று சுற்றிப் பார்த்தார். அங்குள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.



    இந்நிலையில், செசல்ஸ் அதிபர் டேனி டெல்லியில் இன்று மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.  #SeychellesPresident
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. #GovernorsConference
    புதுடெல்லி:

    தூய்மை இந்தியா மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை  முக்கியமானதாக கொண்டு அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு மொத்தம் 6 அமர்வுகளாக நடைபெற உள்ளது. 

    இதில், முதலாவது அமர்வில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றுகிறார். 
    இரண்டாவது அமர்வில், மத்திய அரசின் முக்கிய நல திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொகுத்து வழங்குகின்றனர். பிரதமர் மோடியும் இந்த அமர்வில் உரை நிகழ்த்த உள்ளார்.

    மூன்றாவது அமர்வில், மாநில பல்கலைக்கழங்களின் உயர்கல்வி குறித்தும், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குஜராத் கவர்னர் ஒருங்கினைக்கும் இந்த அமர்வை, மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தொகுத்து வழங்க உள்ளார். 



    நான்காவது அமர்வில், மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்கள் ‘ராஜ்யபால்- விகாஸ் கே ராஜ்தூத்’ எனப்படும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆளுனர்களின் பங்கு என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதை, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் கவர்னரான நரசிம்மன் ஒருங்கினைத்து நடத்த உள்ளார். 

    ஜூன் 5-ம் தேதி நடைபெறும் 5வது அமர்வில் மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த அமர்வை, உத்தரப்பிரதேச கவர்னர், ராம் நாயக் ஒருங்கினைக்க உள்ளார்.

    ஆறாவது மற்றும் கடைசி கட்ட அமர்வில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்துகின்றனர். #governorsconference
    ×