என் மலர்
இந்தியா

ஜனாதிபதி மாளிகையை இந்த தேதிகளில் பார்வையிட முடியாது
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
இந்நிலையில், குடியரசு தினவிழா 26-ம் தேதி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியரசு தினவிழா அணிவகுப்பு மற்றும் வீரர்கள் பாசறை திரும்பும் விழா போன்றவை காரணமாக ஜனாதிபதி மாளிகையை பொது மக்கள் பார்வையிட வரும் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், 29-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும்.






