search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameshwaram Fisherman"

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. #TamilnaduFisherman
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

    ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்ததுடன், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் 11 பேரை கைது செய்தது.



    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். #TamilnaduFisherman #SrilankanNavy

    இலங்கை கடற்படையால் கைதான ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. #TNFishermen
    ராமேசுவரம்:

    கடந்த வாரம் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இவர்கள் அங்குள்ள ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கு விசாரணையின் போது 16 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இனிமேல் மீண்டும் பிடிபட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் தற்போது விடுதலை செய்வதாக நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார். #TNFishermen
    ×