search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha election"

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான 3 தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

    இதற்கிடையே, வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் இருந்தது.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
    பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருதுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற மேல் சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய டெல்லியில் ஆலோசனை நடந்து வருகிறது.

    தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு செல்ல மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வாக வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், எம்.பி. பதவியை கேட்கிறார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது போட்டியிடாமல் பிரசாரம் செய்ததால் தனக்கு மேல்சபையில் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே முன்னாள் எம்.பி. விஸ்வநாதனும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். காங்கிரஸ் மேலிட தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தியும் ஓசையின்றி எம்.பி. பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்தியுள்ளார்.

    தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்க முடியும் என்ற நிலையில் 4 பேரிடையே போட்டி நிலவுகிறது. இதில் ப.சிதம்பரத்துக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருதுகிறார்.

    எனவே ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சோனியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காவுக்கு சட்ட ஆலோசகராக ப.சிதம்பரம் திகழ்கிறார். இதனால் பிரியங்காவின் ஆதரவும் சிதம்பரத்துக்குத்தான் உள்ளது. எனவே ப.சிதம்பரம் தேர்வாக 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே மேலிட தலைவர்கள் சிலர் மூலம் கே.எஸ்.அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்காததால் அவர் சற்று அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.

    முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை பொருத்த வரை அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபாலை நம்பி களம் இறங்கி உள்ளார். இன்று காலையில் கூட கே.சி.வேணு கோபாலுடன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் விஸ்வநாதன் கலந்துகொண்டார். என்றாலும் விஸ்வநாதனுக்கு எம்.பி. ஆகும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே.

    காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. புது முகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரவீனை, ராகுல் ஆதரிக்கிறார். மேலும் ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்ற அடிப்படையில் சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்க ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    என்றாலும் சோனியாவும், பிரியங்காவும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருப்பதால் ராகுலும் கடைசியில் விட்டுக்கொடுத்து விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

    மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.

    இதன்மூலம் மேல்சபையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.


    ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 மேல்சபை உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதாக தெரிகிறது. இதேபோல கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பி துரையும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதாக தெரிகிறது. அ.தி.மு.க. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்று தெரிவில்லை. தி.மு.க. தலைமை இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.

    ×