search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan Government"

    ராஜஸ்தான் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சோக் கெலாட் அறிவித்துள்ளார். #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றார்.

    தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் ரே‌ஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:-

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும். இதன்மூலம் ரூ.1.53 கோடி மக்கள் பயன் அடைவார்கள். சிறிய மற்றும் வயதான விவசாயிகள் தற்போது பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்களும் பென்‌ஷன் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

    பால் கொள்முதல் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 போனஸ் வழங்கப்படும் 5 ஆயிரம் பால் பூத்துக்கள் திறக்கப்படும். விவசாயிகள் சிறப்பு சலுகையாக சிறிய கால கடன்தொகை வழங்கப்படும். மத்திய கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கியில் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முற்பட்டோர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AshokGehlot

    காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம், பராமரிப்பில்லாத பசுக்களை தத்தெடுத்தோருக்கு வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பாராட்டு விழாவினை நடத்தவுள்ளது. #RajasthanGovt #StrayCows #DirectorateOfGopalan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பற்ற பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த பசுக்கள் மீட்கப்பட்டு  கோ சாலைகளில் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் பசுக்கள் பராமரிப்பின்றி உள்ளன.

    இந்நிலையில், பசுக்களை பாதுகாக்கும் அரசு அமைப்பான, கோபாலன் இயக்குனரகம், புதிய நடவடிக்கையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

    அதில் நன்கொடையாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சமூக சேவகர்கள் மற்றும் பசு பாதுகாவலர்கள் போன்றோரை பசுக்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், பசுக்களை தத்தெடுத்தோருக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்டு 15 ஆகிய தேதிகளில் பாராட்டு விழா நடத்தி, கவுரவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    “கோ சாலைகளில் உள்ள பசுக்களை தத்தெடுத்து அங்கேயே பராமரிக்க விரும்புவோர், அந்தந்த கோ சாலையால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தத்தெடுத்த பசுக்களை பார்வையிட முடியும். மேலும், தத்தெடுத்த மாடுகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றும் பராமரிக்கலாம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதுபற்றி கோபாலன் இயக்குனரக இயக்குனர் விஷ்ரம் மீனா கூறுகையில், “மக்களின் ஒத்துழைப்போடு பசுக்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களில் பராமரிப்பற்ற பசுக்களை தத்தெடுத்தோர் மாவட்ட கலெக்டர்களால் கவுரவிக்கப்பட்டால், மேலும் நல்ல  முயற்சிகளை  மேற்கொள்வார்கள்.

    டிசம்பர் 28 ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கோ சாலைகளில் பராமரிப்பற்ற விலங்குகளை தத்தெடுக்கும் மக்கள் உள்ளனர். அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில், தத்தெடுத்த மாடுகளுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பாளர்களை ஊக்குவிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    பசுக்களை தத்தெடுக்க விருப்பமுள்ள நபர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். விருப்பம் தெரிவித்தோரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்குவார்கள்” என்றார். #RajasthanGovt #StrayCows #DirectorateOfGopalan 
    ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. #RajasthanGovernment #DressCode
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அந்த மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிவதற்கு தடை விதித்து மாநில உயர் கல்வி துறை உத்தரவிட்டு இருந்தது.

    இதை கண்டித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.



    ராஜஸ்தான் மாநில தொழிலாளர் நலத்துறை இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் ஆணையர் கிரிராஜ் சிங் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் இதர அநாகரீகமான, கண்ணியக் குறைவான ஆடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருகிறார்கள். பணிக்கு வரும் போது இது போன்ற உடைகளை அணிவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். நாகரீகமான, கண்ணியமான உடைகளை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் அரசின் இந்த உத்தரவுக்கு மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் கூறும் போது, ‘‘ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய உடைகள் அநாகரீகமானவை என்று எப்படி கூற முடியும்? இது போன்று கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசு பணியாளர்களுக்கான விதிகளில் இடமில்லை. இந்த நடவடிக்கையை நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஒவ்வொருவர் மீதும் திணிக்க பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் பா.ஜனதா அரசின் முடிவை நியாயப்படுத்தி உள்ளது. #RajasthanGovernment #DressCode

    ×