என் மலர்
நீங்கள் தேடியது "Rajapalayam accident"
ராஜபாளையம் சன்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஜய்குமார் (வயது 17). சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வீட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ்சில் அஜய்குமார் சத்திரப்பட்டி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
பழைய பஸ் நிலையம் அருகே ஊரணி பட்டி தெரு விலக்கில் அஜய்குமார் சென்றபோது, கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அட்டைப்பாரம் ஏற்றிச் சென்ற லாரி வந்தது.
அந்த லாரி எதிர்பாராத விதமாக அஜய்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பலியான மாணவர் அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துக்கு காரணமான அம்பையைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவர், லாரி மோதி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 31). இவர் கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்த அவர் மதியம் சாப்பிடுவதற்காக கீழே இறங்கினார்.
அப்போது ஆபிரகாம் எதிர்பாராத விதமாக கால் இடறி சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அபிரகாம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆபிரகாம் மனைவி புஷ்பவள்ளி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மேட்டுவடகரையைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது30). இவர் முரம்பில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். கருப்பசாமியின் தந்தை ஆறுமுகம் (58). இவர் சிமெண்டு கடை வியாபாரத்தை கவனித்து வந்தார்.
நேற்று மதியம் ஆறுமுகம் கடை அருகே ராஜபாளையம்- நெல்லை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஆறுமுகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.
உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தென்மலை மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 36) இவர் நைட்டி தைத்து தளவாய்புரத்துக்கு சென்று கொடுப்பார். வழக்கம் போல் தைத்து வைத்திருந்த நைட்டிகளை கொடுக்க ராஜபாளையத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டார். அவருடன் உறவினர் குரு கணேஷ் (21) என்பவரும் சென்றார். ஆட்டோவை முனியாண்டி (25) என்பவர் ஓட்டிச் சென்றார். வேகமாகச் சென்ற ஆட்டோ இனாம்கோவில்பட்டி திருப்பத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த குரு கணேஷ், முனியாண்டி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #accidentcase






