search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain water entered"

    • பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் கருப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்று சுவரை ஒட்டி மேற்கு பக்கம் பெரியாறு கால்வாயின் 12-வது கண் பிரிவு கிளை பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து வீடு மற்றும் கழிவறைகள் கட்டி உள்ளதால் பாசன கிளை கால்வாயின் அகலம் சுருங்கியது. தற்போது பெய்யும் மழையால் கிளை கால்வாயில் மழைநீர் வரத்து அதிகமாகி தண்ணீர் செல்ல முடியாமல் இடிந்து கிடந்த பள்ளி சுற்று சுவர் வழியாக மழை நீர் பள்ளி வளாகத்திற்கு புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமையாசிரியை வீட்டு அனுப்பி வைத்தார். மற்ற வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கம்போல் வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்லமுடியாமல் மாணவ. மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த அவலநிலையை போக்க மாவட்ட நிர்வாகம் கிளை கால்வாய் ஆக்கிமிப்புகளை அகற்றி சேதமான பள்ளி சுற்றுசுவர் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரை பலப்படுத்தப்படாததால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
    • ராஜவாய்க்காலில் ஏற்பட்டுள்ள உைடப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வெண்டிக்காய், வாழை, பருத்தி, கத்திரி உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வேட்டுவன் கண்மாய், ஒட்டகுளம் கண்மாய் மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய்க்கு ராஜவாய்க்காலில் இருந்து நீர் கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜவாய்க்கால் மூலம் கண்மாய்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முறையாக கரை பலப்படுத்தப்படாததால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, பருத்தி, கத்தரிக்காய் உள்ளிட்டவிளை பொருட்கள் சேதமாகியது. மேலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சேதாரம் அதிகமானதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்களுக்கு நஷ்டஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ராஜவாய்க்காலில் ஏற்பட்டுள்ள உைடப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×