search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail services"

    • நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
    • சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.

    இந்த மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்க நல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரை யிலான ரெயில்வே தண்ட வாளம் பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர், தாதன் குளம் மற்றும் ஆழ்வார்திரு நகரி பகுதிகளில் இரவு பகலாக ரெயில்வே தண்ட வாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் நாளை (31-ந்தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரெயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 5-ந்தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தஞ்சாவூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
    சென்னை

    பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    சென்னை எழும்பூர்-மதுரை (வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும். 

    காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் 
    எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். 

    தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×