என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rahul hugs modi
நீங்கள் தேடியது "Rahul Hugs Modi"
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுவதாக பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். #ModislamsOppn #RahulHugsModi
லக்னோ:
பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியில் ‘கிசான் கல்யான்’ நிகழ்ச்சியில் இன்று விவசாயிகள் இடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு உதவ முன்வரவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய மத்திய அரசும், உத்தரப்பிரதேசம் மாநில அரசும் விவசாயிகளின் கடுமையான உழைப்புக்கு மரியாதை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
ஆனால், எதிர்க்கட்சிகள் ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மையை மறந்துவிட்டு பிரதமர் நாற்காலி ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
நேற்று பாராளுமன்றத்தில் நடந்தது உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? தவறு யாருடையது என்று புரிந்து கொண்டீர்களா? ஏழைகளை பற்றியோ, நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு பிரதமர் நாற்காலி மட்டும்தான் முக்கியம்.
நான் ஏதாவது தவறு செய்தேனா?, நான் நாட்டுக்காகவும், ஏழைகளுக்காகவும்தான் உழைக்கிறேன். ஊழலை எதிர்த்து போராடுகிறேன். இதுதான் என் தவறா?
எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காரணம் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கான பதில் யாரும் கூறவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார். #ModislamsOppn #RahulHugsModi
பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியில் ‘கிசான் கல்யான்’ நிகழ்ச்சியில் இன்று விவசாயிகள் இடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு உதவ முன்வரவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய மத்திய அரசும், உத்தரப்பிரதேசம் மாநில அரசும் விவசாயிகளின் கடுமையான உழைப்புக்கு மரியாதை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இதன் காரணமாகவே கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து கரும்பின் சக்கை மற்றும் சாறில் இருந்து ‘எத்தனால்’ தயாரிக்க அனுமதி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மையை மறந்துவிட்டு பிரதமர் நாற்காலி ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
நேற்று பாராளுமன்றத்தில் நடந்தது உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? தவறு யாருடையது என்று புரிந்து கொண்டீர்களா? ஏழைகளை பற்றியோ, நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு பிரதமர் நாற்காலி மட்டும்தான் முக்கியம்.
நான் ஏதாவது தவறு செய்தேனா?, நான் நாட்டுக்காகவும், ஏழைகளுக்காகவும்தான் உழைக்கிறேன். ஊழலை எதிர்த்து போராடுகிறேன். இதுதான் என் தவறா?
எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காரணம் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கான பதில் யாரும் கூறவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார். #ModislamsOppn #RahulHugsModi
பாராளுமன்றத்தில் மோடி தன் இருக்கையில் அமர்ந்திருந்தபோது ராகுல் காந்தி கட்டிப்பிடித்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion #RahulHugsModi
புதுடெல்லி:
இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.
அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #NoConfidenceMotion #IndiaTrustsModi #MonsoonSession #RahulHugsModi
மோடி அரசு மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கடுமையாக தாக்கி பேசினார். இறுதியில் தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறிச் சென்று, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டாலும், பாஜகவினரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்துவிட்டு, ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து, கண்ணைச் சிமிட்டினார்.
இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ''ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. அவர் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.
அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கொடுத்து, அவர்களை மெருகேற்றவேண்டியது தாயின் கடமையாகும்'' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். #NoConfidenceMotion #IndiaTrustsModi #MonsoonSession #RahulHugsModi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X