search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi slams"

    அரசியல் ரீதியாக என்னுடன் மோத பலமில்லாத காங்கிரசார் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத தனது தாயாரை விமர்சிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். #Modi #ModiMother #Modislams
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடைந்துவரும் வீழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார், அமெரிக்க டாலரின் உயர்வை மோடியின் தாயார் வயதுபோல் டாலரின் விலையும் கூடிக்கொண்டே போகிறது என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சத்தர்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசிய மோடி கூறியதாவது:-

    கடந்த 17,18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் வெற்றிகரமாக போரிட்டு வருகிறேன். என்னை எதிர்த்து போராட சக்தியற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று மிகவும் கீழ்த்தரமாக சென்று எனது தாயாரை அரசியலுக்கு இழுக்கின்றனர்.



    என்னோடு போட்டிப் போட்டு வெல்ல முடியாது என்பதால் அரசியல் பற்றி எதுவுமே தெரியாத என் தாயாரை இப்போது வம்புக்கு இழுக்கிறார்கள்.

    எனது தாயாரின் பெயரை இழுப்பதால் மட்டும் இந்த தேர்தலில் டெபாசிட் பறிபோகும் அளவுக்கு நீங்கள் அடையவிருக்கும் தோல்வியில் இருந்து தப்ப முடியாது.

    இங்கு நடைபெறும் சிறிய உள்ளாட்சி தேர்தலில்கூட இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி தருமாறு அனைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

    என்னை மட்டுமில்லாமல் மத்தியப்பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானைகூட மாமா என்று விமர்சித்து கிண்டல் செய்கிறார்கள். உங்கள் தாய்வழி மாமாக்கள் ஓட்டாவியோ கோத்ரோச்சி (போபர்ஸ் ஊழல்) மாமாவையும், வார்ரென் ஆன்டர்சன் (போபால் விஷவாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்) மாமாவையும் நீங்கள் ஏன் நினைப்பதில்லை?

    எனது அரசில் 125 கோடி மக்களும் எஜமானர்கள். ஒரு மேடம் (சோனியா) கையில் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இந்த ஆட்சி நடக்கவில்லை. மேடம் தலைமையிலான கட்சியின் ஆட்சி நடந்தபோது பணக்காரர்களுக்காக வங்கி கஜானாக்கள் காலி செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் தேவையில் உள்ள இளைஞர்களுக்காக வங்கி கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #ModiMother #Modislams

    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுவதாக பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். #ModislamsOppn #RahulHugsModi
    லக்னோ:

    பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியில் ‘கிசான் கல்யான்’ நிகழ்ச்சியில் இன்று விவசாயிகள் இடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு உதவ முன்வரவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய மத்திய அரசும், உத்தரப்பிரதேசம் மாநில அரசும் விவசாயிகளின் கடுமையான உழைப்புக்கு மரியாதை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இதன் காரணமாகவே கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து கரும்பின் சக்கை மற்றும் சாறில் இருந்து ‘எத்தனால்’ தயாரிக்க அனுமதி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.



    ஆனால், எதிர்க்கட்சிகள் ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மையை மறந்துவிட்டு பிரதமர் நாற்காலி ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

    நேற்று பாராளுமன்றத்தில் நடந்தது உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? தவறு யாருடையது என்று புரிந்து கொண்டீர்களா? ஏழைகளை பற்றியோ, நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு பிரதமர் நாற்காலி மட்டும்தான் முக்கியம்.

    நான் ஏதாவது தவறு செய்தேனா?, நான் நாட்டுக்காகவும், ஏழைகளுக்காகவும்தான் உழைக்கிறேன். ஊழலை எதிர்த்து போராடுகிறேன். இதுதான் என் தவறா?

    எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காரணம் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கான பதில் யாரும் கூறவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #ModislamsOppn #RahulHugsModi
    ×