என் மலர்
நீங்கள் தேடியது "Raavana kottam"
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
`மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நடிகர் சாந்தனு அடுத்ததாக `இராவண கோட்டம்' என்ற படத்தில் நடிக்கும் நிலையில், இந்த பட அறிவிப்பை பார்த்த நடிகர் விஜய் சாந்தனுவுக்கு வாழ்த்து அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். #Vijay #RAAVANAKOTTAM
கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கு `இராவண கோட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
“ VAAZHTHUKKAL NANBA
— Shanthnu Buddy (@imKBRshanthnu) April 28, 2019
TITLE SEMMA “
Yappaaa ..🔥.. The confidence and energy this text message gives u first thing in the morning
... #mersal aayiten
Thank u @actorvijay na fr ur wishes💛🙏🏻 #RAAVANAKOTTAM#இராவணகோட்டம்
இதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. #Vijay #RAAVANAKOTTAM #Shanthanu