என் மலர்
நீங்கள் தேடியது "provide proper"
- ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை.
- சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.
இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.
அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த அவல்பூந்துறை, பூந்துறை சேமூர் பஞ்சா யத்தை சேர்ந்த 9-வது வார்டு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மேற்கண்ட பகுதியில் 20 குடும்பங்களுடன் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய வலி யுறுத்தி யூனியன் அலு வலகத்திலும் மனு கொடு த்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதேப்போல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒரு ங்கிணைப்பாளர், மகளிர் பாசறை சீதாலட்சுமி தலை மையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடு த்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக அறி வுறுத்து கிறோம். சமுதாய த்தில் நடக்கும் பல இழிவான செயல்களுக்கு , பண்பாட்டு சீரழிவிற்கும் மூல காரணமாக அமைவது மது தான்.
எனவே நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் குடும்பங்களை சீரழிக்கும் அயல்நாட்டு மது வகைகளை விற்கும் தமிழக அரசு உடனடியாக அதை கைவிட்டு நம்முடைய பாரம்பரிய பானங்கள், தென்னங்கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.






