search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PROJECT REPORT"

    • புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரண்டா வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் இந்த பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் பயணிக்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப் பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இத்திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பூந்தமல்லி-பரந்தூர் 50 கி.மீ., கோயம்பேடு-ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., சிறுசேரி-கிளாம்பாக்கம் 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு செய்ய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பூந்தமல்லி- பரந்தூர் தடத்தில் சாத்தியக் கூறு பணிகள் தாமதம் ஆகிறது.

    ஆனால் சிறுசேரி-கிளாம் பாக்கம், கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரெயிலுக்கான சாத்தியக் கூறு பணிகள் முடிந்து உள்ளதால் 2 வாரங்களில் அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு 60 சதவீத நிதியும். மாநில அரசும், ஏற்றுமதியாளர் அமைப்பும் தலா 20 சதவீத பங்களிப்பை அளிக்கும்.

    திருப்பூர்:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஏற்றுமதி வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியில் தேசிய அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னோடியாக இருக்கிறது.இதேபோல் பல்வேறு வகைகளிலான ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில் நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

    நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 75 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நிலம் தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி தொடங்கியுள்ளது.

    ஏற்றுமதி வர்த்தகத்தின் தற்போதைய நிலை, தொடர் மேம்பாட்டு ஆய்வு, உற்பத்தி தர நிர்ணயம், கண்காட்சி வளாகம், கூட்ட அரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி என பல்வேறு வசதிகளுடன் ஏற்றுமதி மையம் அமைய உள்ளது.அதற்காக தலா 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் திருப்பூர் உட்பட சில மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. திருப்பூர் நகரப்பகுதியில் கூடுதல் தொழில்நுட்ப வாய்ப்புகளுடன் பிரமாண்டமான ஏற்றுமதி மையம் அமையும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இத்திட்ட பணிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இத்திட்ட பணிகளை மேற்கொள்ளும்.மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்கும். மாநில அரசும், ஏற்றுமதியாளர் அமைப்பும் தலா 20 சதவீத பங்களிப்பை செலுத்தி திட்டம் நிறைவேற்றப்படும்.

    ஏற்றுமதி மையம் வாயிலாக புதிய தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும் என்பதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்தகட்டத்தை நோக்கி நிச்சயம் பயணிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    • காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தால் பாதிக்கப்படுவோர் மறுவாழ்வுக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

    கரூர்:

    காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

    காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான மாவட்ட குழுக் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் அலகு-1-ல் சிந்தலவாடி, பிள்ளாபாளையம், கருப்பத்தூர், குளித்தலை வட்டம் அலகு-2ல் மருதூர் தெற்கு-, வைகைநல்லூர் தெற்கு, இரணியமங்கலம், சத்தியமங்கலம். இனுங்கூர், குளித்தலை வட்டம், அலகு-3ல் தளிஞ்சி, நங்கவரம் தெற்கு-1, நெய்தலூர் தெற்கு, ராச்சாண்டார் திருமலை ஆகிய 12 கிராமங்களில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நில எடுப்பிற்கு உட்படும் விஸ்தீரணம் 346.11.38 ஹெக்டேர்.

    இதனால் இங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீட்டுக்கான வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நிர்வாகி, மறுவாழ்வு, மீள்குடியமர்வு அலுவலரால் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதில் நிலமெடுப்பில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியமர்வு, உரிமைக் கூறுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில், நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு, மீள்குடியமர்வு இழப்பீடுகளை மறு ஆய்வு செய்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இறுதி செய்வது குறித்து மறுவாழ்வு, மறுகுடியமர்வுக்கான மாவட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய ஏதுவாக மறுவாழ்வு, மீள்குடியமர்வு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது என்றார்.

    ×