search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project order"

    • பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும்.
    • பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும்.

    காங்கயம் :

    கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் - முத்தூர் சாலையில் உள்ள லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வெள்ளியம்பாளையம் குழந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் செ.நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கீழ்பவானி பெயரல்ல- எங்கள் உயிர், கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பவானிசாகர் மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் தோல்வி கண்ட கான்கிரீட் திட்டத்தை கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புகுத்த கூடாது, கீழ்பவானி பாசன மண் கால்வாய் மழைநீர் அறுவடை திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்ட திட்டம் ஆகும்.

    இதனால் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இந்த திட்டங்கள் பாழ் பட்டு போகும். மேலும் சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.

    மேலும் பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பு படி நடத்தப்பட வேண்டும். இதன்படி பழைய பாசனங்களுக்கு 8 டி.எம்.சி.தண்ணீரும், கீழ்பவானி பாசனத்திற்கு 28 டி.எம்.சி. தண்ணீரும் என ஒரே விகிதாச்சார அடிப்படையில் நீர் நிர்வாகம் நடத்தப்பட வேண்டும். மேலும் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்தாலும், கூடினாலும் இதே விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கோடை சாகுபடி மற்றும் குறுவை பருவத்திற்கும் தண்ணீர் திறக்க கூடாது. நஞ்சை சம்பா சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×