search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pothi vinayagar temple"

    • போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

    அன்னதானம்

    இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, இளஞ்சூரியன், ராஜ்குமார், முருகேசன், ராம்குமார், சேகர், மணி, கணேஷ், சண்முகசுந்தரம், அசோக் பெரியசாமி, சரவணன், தங்கசந்திரன், சித்திரைசெல்வன், பெரியசாமி, மாணிக்கம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநில பேச்சாளர் சரத்பாலா, விவசாய அணி தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, முத்துச்செல்வம், செல்வகுமார், ரவீந்திரன், செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், மணி, ஜோஸ்பர், லிங்கராஜா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
    • போத்தி விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

    இந்த கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் செல்வம் என்ற கல்யாணசுந்தர சிவாச்சியார் மூலம் நான்குகால யாகசாலை பூஜையுடன் நடைபெற்று, போத்தி விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தரிசனம் செய்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தொழிலதிபர்கள் மணி, தெய்வநாயகம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மகா கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் தர்மகர்த்தாவுமான ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், கீதாமுருகேசன், ஆழ்வார் ராஜ், மந்திரமூர்த்தி, பெரியசாமி செல்வகுமார், இளஞ்சூரியன், ராஜ்குமார், ராஜாமணி, ரவீந்திரன், முருகேசன், ராம்குமார், சேகர், மணி, கணேஷ், சண்முகசுந்தரம், அசோக், சரவணன், தங்க சந்திரன், சித்திரைசெல்வன், பெரியசாமி, மாணிக்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தினர். முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×