search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "possessing ganja"

    • பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நரசாபரம் பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கே அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (62) என்பவரது சாலை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் பாலிதீன் கவரில் 100-கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

    போலீசார் விசாரணையில் ராமசாமி கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், தனது பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தேவகோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    • இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.

    தேவகோட்டை

    கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறாவயல் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மருது அமல்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோர் முள்ளிக்குண்டு அருகே காரைக்குடி தேவ கோட்டை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கானதான்காடு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி மாணவர் விஜய் (21) மறித்து சோதனை செய்தனர். இதில் அவர் 180 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.

    ×