search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poor quality food"

    • தமிழ், ஆங்கிலத்தில் அளிக்க நடவடிக்கை
    • நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களின் அன்றாட தேவைகளில் அவசிய மானதாக விளங்கும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்கள் தங்கள் புகார்களை ஆன்லைன் வழியாக மற்றும் செல்போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

    இதற்காக புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் தமிழ்நாடுஉணவு பாதுகாப்பு துறையின் நுகர்வோர் புகார் செயலி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இச்செயலி வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை மிக எளிமையாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அளிக்கலாம்.

    மேலும் இந்த இணைய தளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை புதிய இணையதளம் மற்றும் ஆப் பதிவிறக்கம் செய்து டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தரமற்ற உணவு, கலப்பட செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை இதற்கான இணையதளம் மூலமும், கைபேசிசெயலி மூலமும் தெரிவிக்கலாம்.

    மேலும் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூன்று நபர்கள் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
    • அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .

    கடலூர்:

    உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் அஜய் மோகன் உட்பட 3 பேரும் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுத்துவிட்டு உணவு பொருள் காலாவதியானது. உணவுகள் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி ஓட்டல் உரிமையாளர் இடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், தனிப்பிரிவு தலைமை ஏட்டு சரவணன் உட்பட விரைந்து சென்று தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரேஷ், அஜய், மோகன் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்
    • நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், மற்றும் முருகன் கோவில் போன்ற அதிக முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது எப்பொழுதும் ஒரே சமச்சீரான சீதோசனம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளை ஏலகிரி மலை ஈர்க்கிறது.

    இந்நிலையில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், இங்கு தரமான உணவுகள் கிடைப்பதில்லை என்றும், அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்றும், விலைக்கேற்ற உணவுகள் கிடைப்பதில்லை, பதப்படுத்தப்பட்ட மற்றும் கலப்பட உணவுகள் அதிகளவில் விற்கப்படுகிறது எனவும் சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏலகிரி மலையில் தரமான உணவுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×