search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police wife"

    • சக்திவேல் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
    • முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணங்கார குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். சக்திவேலிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாவுடன் தகராறில் ஈடுபடுவார். இதேபோல் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உமாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த உமா தனது விவசாய நிலத்திற்கு சென்று அங்கிருந்த முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உமாவின் தாய் ராணி முத்தாண்டிக்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வ ஹேமாவதி காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார்.
    • காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் காரைக்காலில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வ ஹேமாவதி. இவர் காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர். இதுகுறித்து ஹேமாவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 28) மற்றும் மன்னார்குடி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (27) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் ஹேமாவதியிடம் செயிைன பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

    ×