காரைக்காலில் போலீசாரின் மனைவியிடம் நகை பறித்த 2 பேர் கைது

செல்வ ஹேமாவதி காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார்.காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர்.
கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.
Published on

காரைக்கால்:

காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் காரைக்காலில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வ ஹேமாவதி. இவர் காரைக்கால் அடுத்துள்ள தனியார் ஆஸ்பத்தரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காரைக்கால் கடற்கரை சாலை அருகில் உள்ள பாரதி நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சங்கியை பறித்து சென்றனர். இதுகுறித்து ஹேமாவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 28) மற்றும் மன்னார்குடி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (27) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் ஹேமாவதியிடம் செயிைன பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com