search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Registers Case"

    • கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் சாவு
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் கள்ளக்குறிச்சி வேங்கைவாடி சேர்ந்தவர் குருசாமி (வயது 43).இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் மனைவி கொலை செய்த வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குருசாமிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக குருசாமியை உடனடியாக சிறை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அப்போது குருசாமிக்கு முதலுதவி செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குருசாமியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சபரிமலைக்கு விதிமுறைகளை மீறி வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SabrimalaVerdict #ActorKollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

    அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது காவல்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. #SabrimalaVerdict #ActorKollamThulasi

    ×