search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabrimala Issue"

    சபரிமலைக்கு விதிமுறைகளை மீறி வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SabrimalaVerdict #ActorKollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

    அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது காவல்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. #SabrimalaVerdict #ActorKollamThulasi

    ×