search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மத்திய சிறைச்சாலையில்  கைதி திடீர் சாவு
    X

    கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் சாவு

    • கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் சாவு
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் கள்ளக்குறிச்சி வேங்கைவாடி சேர்ந்தவர் குருசாமி (வயது 43).இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் மனைவி கொலை செய்த வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குருசாமிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக குருசாமியை உடனடியாக சிறை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அப்போது குருசாமிக்கு முதலுதவி செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குருசாமியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×