search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police permission"

    • 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
    • அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசு வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார். இதன்படி 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் நடைபயணத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நடை பயணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வோம். இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசாரின் கருத்துக்களை கேட்டுள்ளோம். அதன் பிறகே நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் 11-ந் தேதி மாலையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு மடிப்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. இவற்றில் ஏதா வது ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    அண்ணாமலையின் நடைபயணத்தை காலையில் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தை மாலையில் நடத்த முடிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் சென்னையில் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். #Vetriivel #HungerStrike
    சென்னை:

    பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் ஆவார்.

    கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற முடியாத காரணத்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று அரசு மீது குற்றம் சுமத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து தங்களது தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.



    ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னையில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் அம்பேத்கார் கல்லூரி எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் 17-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க போலீசில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து வெற்றிவேல் கூறுகையில், இதற்கு முன்பு புரட்சித்தலைவி அம்மா கைதானபோது இந்த இடத்தில் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். எனவே இப்போது போலீசார் எனக்கு அனுமதி கொடுக்க மறுப்பது வியப்பாக உள்ளது. எனவே நான் நீதிமன்றம் சென்று முறையிடுவேன். இதே இடத்தில் மீண்டும் அனுமதி பெற்று உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். #Vetriivel  #HungerStrike

    ×