என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poetry competition"

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    சிவகிரி:

    தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சாந்தி, சமுதாய அமைப்பாளர் செல்வகுமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் காளி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    போட்டியில் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 122 குழுவிற்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதனைப் போன்று ராயகிரி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற போட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த 75 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தலா 3 நபர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தன், கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் பத்திரகாளி, அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டியும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது. அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா விழாவை ஒருங்கிணைத்தார்.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    விழாவில் மாவட்ட இணை செயலாளர் துரையரசன், சின்னராசா, பாக்கியராஜ், ஆசிரியை விஜயலட்சுமி, பாரதிராஜா, சசிகுமார் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

    • புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டியும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது. அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா விழாவை ஒருங்கிணைத்தார்.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    விழாவில் மாவட்ட இணை செயலாளர் துரையரசன், சின்னராசா, பாக்கியராஜ், ஆசிரியை விஜயலட்சுமி, பாரதிராஜா, சசிகுமார் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

    ×