search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Jug"

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 75) என்பவர் வீட்டின் அருகே பிளாஸ்டிக் குடத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்ப ள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான சேர்கள், பிளாஸ்டிக் குடம், டப்கள், சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தியிடம் வழங்கினர்.

    தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளியில் முதல் முறையாக அபாகஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு 50 மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யாதனராஜ் வழங்கினார். அப்போது தி.மு.க நிர்வாகி ஒப்பந்ததாரர் தனராஜ் உடன் இருந்தார்.

    இரும்புதலை பகுதியில் நாயின் தலையில் பிளாஸ்டிக் குடம் சிக்கியதால் உணவு உட்கொள்ள முடியாமல் அந்த நாய் உயிருக்கு போராடி வருகிறது.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் தெருநாய் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது. 

    அப்போது அந்த நாய் தண்ணீர் குடிக்க அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பிளாஷ்டிக் குடத்திற்குள் தலையை விட்டது. 

    தலையை மீண்டும் எடுக்க முடியாமல் போகவே நாய் பயந்து போய் அங்கும், இங்கும் ஓடி மோதி கொண்டதில் குடத்தின் அடிபாகம் உடைந்து போனது.

    ஆனால் குடத்தின் மேல்பாகம் நாயின் கழுத்தில் வசமாக மாட்டி கொண்டதால் அதனால் கழட்ட முடியவில்லை. இதனால் தலையில் குடம் மாட்டிய நிலையில் பல நாட்களாக சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது. 

    இதனால் அந்த நாயால் உணவு சாப்பிட கூட முடியாமல் அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்து உயிருக்கு போராடி வருகிறது. கிராமத்தினர் சிலர் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற முயற்சித்தும் நாய் நிற்காமல் ஓடிவிடுவதாக கூறுகின்றனர்.

    ரோட்டில் செல்லும் வாகனத்தில் அடிபட்டு இறந்து போய் விடுமோ என பயத்தில் இருப்பதாக கிராம மக்கள் கூறினர். 

    உடனடியாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணியினர் எப்படியாவது நாயின் கழுத்தில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்றி நாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×