search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pinarayi Vijaya"

    • தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல.
    • தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனது கட்சியின் அனைத்து மாநில பிரிவுகளும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    மேலும் கேரளாவில் நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம். எங்களது எம்.எல்.ஏ. அங்கு அமைச்சராக இருக்கிறார். கேரளாவின் இடதுசாரி அரசாங்கத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் கட்சியை காப்பாற்றுவதற்காக பாரதிய ஜனதாவுடன் கரநாடகாவில் முன்னேற முழு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

    தேவேகவுடாவின் இந்த பேச்சு கேரள மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கே.சுதாகரன், வி.டி.சதீசன் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பினராயி விஜயனை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டனர்.

    தனது நிலைப்பாடு குறித்து தேவேகவுடா கூறிய கருத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படையற்ற உண்மைக்கு மாறான தகவலை அவர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். இது பற்றி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பாரதிய ஜனதாவுடனான தொடர்பை திட்டவட்டமாக எதிர்க்கிறோம் எனவும், கேரளாவில் இடது முன்னணியுடன் வலுவாக நிற்போம் என்றும் ஜனதாதளம்(எஸ்) மாநில பிரிவு தெளிவு படுத்தி உள்ளது.

    தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) பாரதிய ஜனதாவில் இணைந்தது. தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதாவுடன் இணைந்தார்.

    தேவேகவுடாவின் சமீபத்திய அறிக்கையால் நான் முற்றிலும் வியப்படைகிறேன். தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது. இதுபோன்ற ஆதாரமற்ற பொய்கள், சங்பரிவாருக்கு எதிரான போரில் சி.பி.எம். ஒரு அசைக்க முடியாத மற்றும் தளராத சக்தியாக இருந்து வருகிறது. எங்களின் நிலைப்பாட்டில் தெளிவற்ற தன்மைக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    • லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது.
    • இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா.

    இவர் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார்.

    பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பினராயி விஜயனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஸ்வப்னா குற்றம் சாட்டினார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

    இந்த நிலையில் கேரளாவில் நடந்த லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மீண்டும் தொடங்க உள்ளது.

    இந்த ஊழல் வழக்கிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்வப்னாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    ×