என் மலர்
நீங்கள் தேடியது "pick pocket"
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த மங்கலத்தை சேர்ந்தவர் சாஜிதா (வயது 45). இவர் திருப்பூருக்கு பஸ்சில் வந்தார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது, சாஜிதா வைத்திருந்த கைப்பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை உடன் பயணம் செய்த பெண் ஒருவர் ஜேப்படி செய்து விட்டு இறங்கி தப்பி ஓடினார்.
இதை கவனித்த சாஜிதா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாரி (29) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.200 மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி ஞானு தியாகு நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 26). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஜிப்மரில் பணி முடித்து அரசு டவுன் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது பஸ்சில் அஞ்சம்மாள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே பயணம் செய்த ஒரு இளம்பெண் நைசாக அஞ்சம்மாள் வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிபர்சை எடுத்தார். இதனை பார்த்து விட்ட அஞ்சம்மாள் மற்ற பயணிகளின் உதவியோடு அந்த பெண்ணை கையும்- களவுமாக பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் அன்பழகன் ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜேப்படி செய்த பெண் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தேன்மொழி (வயது 20) என்பது தெரியவந்தது.
இதையொட்டி தேன்மொழியை கைது செய்தனர். போலீசார் இதுபோல அவர் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






