என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண்கள் கைது
Byமாலை மலர்28 May 2018 4:39 PM GMT (Updated: 28 May 2018 4:39 PM GMT)
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா மனைவி பாத்திமா (25). இவர் நேற்று வெளியூர் செல்வதற்காக சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மைக்கேல் மனைவி கனி (27), பால்துரை மனைவி வேளாங்கண்ணி (27) ஆகிய இருவரும் பாத்திமாவின் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடி உள்ளனர்.
பின்னர் நைசாக நழுவி செல்ல முயன்றுள்ளனர். தற்செயலாக தனது பையை பார்த்த பாத்திமா அதில் பணம் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் தப்பி செல்ல முயன்ற இருவரையும் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை சங்கரன்கோவில் டவுண் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X