என் மலர்
நீங்கள் தேடியது "Pettai Temple"
- பார்வதி அம்மன் கோவிலில் இருந்த 2 பித்தளை குத்துவிளக்குகளை காணாமல் போனது
- விசாரணையில் குத்துவிளக்குகளை திருடியது தங்கச்செல்வம் என்பது தெரியவந்தது.
நெல்லை:
பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பார்வதி அம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி 2 பித்தளை குத்துவிளக்குகளை காணாமல் போனது. இது தொடர்பாக பேட்டை அசோக் நகரை சேர்ந்த சக்திவேல் முருகன் (வயது 54) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவிலில் குத்துவிளக்குகளை திருடியது பேட்டையை சேர்ந்த தங்கச்செல்வம் (39) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புடைய 2 பித்தளை குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தனர்.






