search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to Minister"

    • 7000 மக்கள் தொகை கொண்ட மேல்வைலாமூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது

    விழுப்புரம்:

    மேல்வைலாமூர் ஊராட்சியை 2ஆக பிரிக்க வேண்டும் என்று அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சம்பத் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் மனு ஒன்று அளித்துள்ளார்:-

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மேல்மலையனூர் தாலுக்கா மேல் வைலா மூர் ஊராட்சியில் மேல் வைலாமூர், மேட்டுவைலாமூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள், அடுக்குபாசி, ஆதி திராவிடர் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன இவைகளில் மொத்தம் 7,000 மக்கள் தொகை உள்ளனர். 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது எனவே மேற்படி ஊராட்சியை இரண்டாக பிரித்து மேல் வைலமூர், அடுக்கு பாசி, ஆதிதிராவிடர் காலனி ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் மேட்டு வைலா மூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள் ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    ×