என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
7000 மக்கள் தொகை கொண்ட மேல்வைலாமூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க அமைச்சரிடம் மனு
- 7000 மக்கள் தொகை கொண்ட மேல்வைலாமூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
- 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது
விழுப்புரம்:
மேல்வைலாமூர் ஊராட்சியை 2ஆக பிரிக்க வேண்டும் என்று அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சம்பத் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் மனு ஒன்று அளித்துள்ளார்:-
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மேல்மலையனூர் தாலுக்கா மேல் வைலா மூர் ஊராட்சியில் மேல் வைலாமூர், மேட்டுவைலாமூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள், அடுக்குபாசி, ஆதி திராவிடர் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன இவைகளில் மொத்தம் 7,000 மக்கள் தொகை உள்ளனர். 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது எனவே மேற்படி ஊராட்சியை இரண்டாக பிரித்து மேல் வைலமூர், அடுக்கு பாசி, ஆதிதிராவிடர் காலனி ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் மேட்டு வைலா மூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள் ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்