search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people jail"

    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கயத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் அருகே திருப்பூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த மாதம் 23-ந்தேதி அவரது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த4 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர். இந்நிலையில் நேற்று (23-ந்தேதி) அதிகாலை நடைபயிற்சி வந்த விஜயகுமார் என்பவரிடம் இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.1500-ஐ பறித்து தப்பினர்.

    இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று அங்குள்ள நால்ரோட்டில் பஸ் நிறுத்ததில் 2 பேர் நின்றனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உஷாரான காங்கயம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்ற பல்லன் (வயது 27), சேலம் வாழப்பாடியை சேர்ந்த மற்றொரு கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பூங்கொடியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரிடம் பறித்த பணத்தையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் பல்லன் (எ) கார்த்திக் மீது ஏற்கனவே 18 திருட்டு வழக்குகள் 3 வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் மீது 3 முறை குன்டாஸ் போடப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு கார்த்திக் மீதும் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி ராஜமகேஷ் உத்தரவுப்படி 2 கொள்ளையர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×